இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு சீன உர நிறுவனம் வலியுறுத்து

இலங்கைக்கு எதிராக சீன அரசாங்கம் தடை விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் சீன உரத்தை தடை காரணமாக இந்த நிலை உருவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள சீனாவின் உர நிறுவனம், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளது.

சீனாவின் சீவின்பயோடெக் நிறுவனத்தின் சேதன பசளையில், ஆபத்தான பக்டிரீயாக்கள் காணப்படுவது உள்ளூர் சோதனைகளின் மூலம் உறுதியானதைத் தொடர்ந்து அந்த உரத்தை இலங்கை நிராகரித்தது. இதற்குச் சீன நிறுவனம் உடன்படவில்லை.

இலங்கை அரச நிறுவனம் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதுடன், மக்கள் வங்கியையும் கறுப்பு பட்டியலில் இணைத்தது. அதேபோல் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இராஜதந்திர முறுகலும் ஏற்பட்டது.

நெருக்கடிகள் வலுத்ததால் சீன நிறுவனத்துக்கு, 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இலங்கை முன்வந்தது.

இதன்பிரகாரம் இலங்கை அரசு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தியுள்ள போதிலும் – இலங்கை அரசுக்கு எதிராக சீன நிறுவனம் தொடர்ந்தும் போர்க்கொடி தூக்கி வருகின்றது.

இந்த விவகாரத்தால் தனது பெயருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்த நிறுவனம் கருதுகின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைவர்கள், சீன அரசு – இலங்கை மீது தடைகளை விதிக்க வேண்டும் என அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதியை கட்டுப்படுத்தும் நிலைக்கு சீன அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *