திருகோணமலையில் பதினான்கு அடி நீளமான மலைப்பாம்பொன்றினை பிரதேச பொது மக்களினால் இன்று(30) காலை மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் நீதிவான் நீதிமன்ற பிரதேசத்தினை அண்மித்த பகுதியில் இவ்மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் இவ்மலைப்பாம்பு கடந்த இரண்டு நாட்களாக வந்து சென்றதை பகுதியில் வசிப்போர் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மலைப்பாம்பினை பிரதேச பொது மக்கள்,இளைஞர்கள் ஒன்றினைந்து பிடித்து வனஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும், அப்பாம்பினை யால வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

