நாட்டில் எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டாலும் நீர் மின்சாரம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என மின்சக்தி அமைச்சின் பேச்சாளரான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை மின்வெட்டு ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், நாடு எண்ணெய் நெருக்கடியை சந்தித்தாலும் மாற்றாக நீர் மின்சாரம் செயற்படுத்தப்படும்.
பெப்ரவரி மாதத்திலிருந்து இலங்கை வரண்ட காலநிலையை அனுபவிப்பது வழமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.