நாட்டில் வருடாந்தம் சிகரெட் விலையை அதிகரிப்பதற்காக வரி சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த சூத்திரம் அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையினால் இந்த வரி சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் பொருளாதாரத்திற்குத் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் சிகரெட்டின் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக உரிய முறைமைக்கு சிகரெட்டின் விலையை அதிகரிப்பதே இந்த வரி சூத்திரத்தின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.