கொட்டதெனியாவ – வத்தேமுல்ல பாண்டுராகொட பகுதியைச் சேர்ந்த 10 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காணாமல் போன சம்பவம் குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
காணாமல் போன சிறுவர்களின் உறவினர்களை விசாரித்த போது கடந்த 23ஆம் முதல் இருவரும் காணவில்லை என்று கூறியுள்ளனர்.
இவ் விடயம் குறித்து கொடதெனியாவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வயதுடைய திஸாநாயக்க முதியன்சேலாகே கவீஷா சந்தகெலும் என்ற சிறுவனும், 12 வயதுடைய ஜயசேகர முதிலிகே அகில டெதுனு என்ற சிறுவனுமே காணாமல் போயுள்ளனர்.