கொழும்பு நகரில் உள்ள தடுப்பூசியின் முதல் டோசை கூட பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் உள்ள அவ்வாறானவர்களை தேடியறிந்து அவர்களை சுகததாச விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச்சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொழும்பில் இதுவரை ஒரு தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ள தவறிய 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அங்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.