துன்மோதர ஆற்றில் காணாமல் போன சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல − துன்மோதர ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இவ்வாறு நீரில் அடித்துச் சென்று காணாமல் போனவர்களில், 14 வயதான சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் அடித்து சென்ற நிலையில், மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தை வந்த நிலையிலேயே, இந்த குழுவினர், அவிசாவளை நோக்கி பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.