இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்கள் மற்றும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  5 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றினால் 98 பேர் உயிரிழந்தனர்.

இதில் 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 12 ஆண்களும்  8 பெண்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 ஆண்களும் 43 பெண்களுமாக 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,017 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேலும் 2.796 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டது.

இதற்கமைய வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின்  மொத்த எண்ணிக்கை 3,26,043 காணப்படுகின்றது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 2,90,794 பேர் இதுவரை மீண்டுள்ளனர்.

இந்நிலையில்  30,330 பேர்,  நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply