இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்று முன்தினம் 98 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,017ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்தது.

உயிரிழந்தவர்களில் 47 ஆண்களும், 51 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *