கோவாக்சின் தடுப்பூசி சிறுவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது – பாரத் பயோடெக்

கோவாக்சின் தடுப்பூசி சிறுவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த தடுப்பூசியை இரண்டு வயது தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், கோவாக்சினின் செயல்திறன், நோய் எதிர்ப்பு போன்ற அம்சங்கள் உற்சாகம் அளிப்பதாக உள்ளதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரிசோதனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பின்விளைவும், பாதிப்பும் ஏற்படவில்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *