இலங்கையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.
இன்றைய தினத்தில் புதிதாக 41 ஒமிக்ரான் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் ஊடாக, ஒமிக்ரான் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.