செலவில்லாமல் அடுப்புக்களை தயாரிக்கும் மக்கள்! உணவின் சுவையும் அதிகமாம்

நாட்டில் எரிவாயு அடுப்பு பாவனையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக, மக்கள் விறகு அடுப்பிற்கு மாறியுள்ளனர்.

திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் உள்ள அதிகளவான பொதுமக்கள் சமையல் அடுப்புக்களை மும்முரமாக தயாரித்து வருவதை காணமுடிகின்றது.

எரிவாயு வெடிப்புச் சம்பவங்களின் அச்சம், சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களினால் பொதுமக்கள் சுற்றுச் சூழலில் கிடைக்கக் கூடிய பொருட்களை கொண்டு விறகு, உமி அடுப்புக்களை தயாரித்து வருகின்றனர்.

இந்த அடுப்பின் மூலமாக செலவுகள் இல்லையெனவும், சமையலும்சுவைமிக்கதாக உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வீட்டுச் சூழலில் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு குறித்த அடுப்புகளை மக்கள் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *