விமல், வாசு, கம்மன்பில மூவரும் இணைந்து கூட்டு நாடகம்! – சாடுகின்றது ஜே.வி.பி

அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகிய மூவரும் நாடகம் அரங்கேற்றிவருகின்றனர்.

  • இவ்வாறு ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

யுகதனவி ஒப்பந்தத்துக்கு அமைச்சர்கள் மூவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உண்மையாலுமே அரசிலிருந்து வெளியேறிதான் அவர்கள் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு வெளியேறமாட்டார்கள். அதேபோல் ஜனாதிபதியும் அவர்களை நீக்கமாட்டார். இவர்கள் எல்லாம் இணைந்து மக்களை ஏமாற்ற நாடகம் அரங்கேற்றிவருகின்றனர் – என்றார்.

அதேவேளை, அரசிலிருந்து வெளியேறும் எண்ணம் தம்மிடம் இல்லை என மேற்படி மூன்று அமைச்சர்களும் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *