மயிலிட்டி துறைமுகத்தை தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்க அரசு திட்டம்?

எங்களின் துறைமுகமும் தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பயன் பெறும் வகையில் மாற்றுப்படும் நிலை காணப்படுவதாக யாழ்ப்பாணம் மயிலிட்டி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

போர் நிறைவடைந்து பல வருடங்களின் பின்னர் ,படிப்படியாக மக்கள் இங்கு வந்து குடியேறியுள்ளனர்.எங்களின் வாழ்வாதாரம் மீன்பிடியிலேயே தங்கியுள்ளது.ஆனால் இன்னும் இரண்டு அல்லது 3 வருடங்களில் நாம் மீன் பிடியை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய ரோலர் படகுகள் இங்கு வந்து குஞ்சு மீன்களை கூட விட்டு வைக்காமல் எல்லா வளங்ளையும் அள்ளிச் செல்கின்றனர்.இன்னும் 3 வருடத்தில் எங்கள் பிள்ளைகள் படிப்பில்லாமல் தெருவில் நிற்கும் நிலை ஏற்படும்.

நல்லாட்சி அரசு இந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்து தென்னிலங்கை மீனவர்கள் பயன் பெறும் வகையில் வழி செய்துள்ளது.இந்த போராட்டம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல.இது எங்களின் வாழ்க்கை போராட்டம் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *