பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு விரைவில் ஆப்பு

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிவதற்காக கைபேசியில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த செயலியைத் தரவிறக்கம் செய்வதன் ஊடாக பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் தொடர்பில் எந்தவொரு நபருக்கும் தகவல் வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து குறித்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதேவேளை, 24 வயதிற்கு உட்பட்டவர்கள் புகையிலை பாவிக்க தடை விதிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *