ஆட்சியாளர்களுக்கு அதி போசாக்கும் மக்களுக்கு மந்த போசாக்குமே உரித்தாகியுள்ளது! சஜித் குற்றச்சாட்டு

ஆட்சியாளர்களுக்கு அதி போசாக்கும் மக்களுக்கு மந்த போசாக்குமே உரித்தாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்தின்மை தலைவிரித்தாடிய நாடு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த எடை கொண்ட குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நாடு என்ற சாதனையை இலங்கை பெற்றுள்ளது.

மக்கள் குறையை கேட்டறியும் ‘மனிதாபிமான சுற்றுலா’வை சூரியவௌ நகரில் ஆரம்பித்து நகர மக்கள் மற்றும் வியாபாரிகளைச் சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்ததுடன், ‘குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு’ என்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கி வைத்தார்.

இதேவேளை, சூரியவௌ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான சுஹக பிரதீப்பின் சூரியவௌ ஐக்கிய இளைஞர் சக்தி அலுவலகத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் மதவாதம், இனவாதம், பொய்களைக் கொண்டே வெற்றி பெற்றது. ஒரு காட்போர்ட் தேசபக்தியை உருவாக்கி, சிங்கள பௌத்த சிந்தனைகள் கணக்கில் எடுக்கப்படாது, இனவாதத்தையும், மதவாதத்தையும், தீவிரவாதத்தையும், பொய்யையும் பரப்பியது இந்த அரசாங்கமே.

இரண்டு வருடங்களில் அரசாங்கம் நம் நாட்டை கண்ணீரில் மூழ்கும் ஒர் சொர்க்கமாக மாற்றிவிட்டது. மறுபுறம் இருண்ட சொர்க்கமாக மாறியுள்ளது.

இது மாத்திரமன்றி இன்று இந்த நாடு பஞ்சபூதமாகவும், தேசிய வள விற்பனை சொர்க்கமாகவும் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *