நாளை சனிக்கிழமை 2022 ஆம் ஆண்டு புதுவருட நிகழ்வை முன்னிட்டு திருகோணமலை நகரில் மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவது மந்தகதியில் உள்ளதை அவதானிக்க முடிந்தது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவில் ஆர்வமின்றி காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.
பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார ரீதியான இடர்பாடுகள் இப்புதுவருட கொண்டாட்டத்தில் தாக்கம் செலுத்துவதை உணர முடிகிறது.
