இந்தியாவுக்கு வழங்கிய எண்ணெய் கிடங்குகளை மீண்டும் பறிக்கும் இலங்கை!

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட எண்ணெய் குதங்களை மீண்டும் வாங்குவதற்கு சாதகமான நிலைகள் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதயன் கம்பன்பில தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட எண்ணெய் குதங்களை மீண்டும் வாங்குவதற்கு சாதகமான நிலைகள் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதயன் கம்பன்பில தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் கால கட்டத்தில் அரசாங்கத்தால் இந்தியாவிற்கு வழங்கிய திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை மீண்டும் பெற்று கொள்ள இந்தியாவுடன் மேற்கொண்டு கலந்துரையாடல் சாதகமான பேச்சுவார்த்தை அமைந்துள்ளது.

இந்தியாவுடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தையில் 99 எண்ணெய் கிடங்குகளில் 24 எண்ணெய் கிடங்குகள் இலங்கைகணிய எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ழைஉ இன் பாவனையில் உள்ள 14 எண்ணெய் கிடங்குகளை இந்தியாவிற்கு 50 ஆண்டுகளுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் இந்த எண்ணெய் கிடங்குகளை பெற்று கொள்ளவதென்பது ஆச்சரியத்திற்குரிய விடயமாகதான் கருதவேண்டியுள்ளது.

தற்போது சங்கடத்தில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்குவது பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *