இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பு ஆலோசகரும், முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தன, நடாஷா மகலந்தவை அண்மையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
நடாஷா மகலந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் ஊழியராவார்.
மஹேல – நடாஷா தம்பதியினர் அண்மையில் தெற்கில் உள்ள உல்லாச விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
மஹேல – முன்னாள் மனைவி கிறிஸ்டினா கருத்து வேறுபாடு காரணமாக 2018 இல் விவாகரத்து செய்து கொண்டனர்.
அவர்களிற்கு 8 வயதான மகள் உள்ளார். தாயின் பராமரிப்பில் பிள்ளை வளர்ந்து வருகிறது.