முல்லைத்தீவில் உயிருக்கு போராடும் காட்டுயானை!

முல்லைத்தீவு – குமுழமுனை மேற்கு கரடிப்பூவல் பகுதியில் இன்று உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்று விவசாய நிலத்தில் வீழந்துள்ளது.

நடக்க முடியாத நிலையில் குறித்த யானை நிலத்தில் வீழ்ந்துள்ளது.

சுமார் மூன்றரை வயதுடைய குட்டியானை வாய்காயத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்ளமுடியாது விவசாயிகளின் விளை நிலத்திற்குள் வந்து வீழ்ந்துள்ளது.

யானை வீழ்ந்துள்ளது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிராம மக்கள் தகவல் கொடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால் நடை மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சையளித்துள்ளார்கள்.

எனினும், யானை எழுந்து நடக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.

யானைக்கு சிகிச்சை மேற்கொண்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர், யானையினை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *