புத்தாண்டையொட்டி கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ColomboTamil https://www.colombotamil.lk Sri Lanka 24 Hours Tamil Online Breaking News : News, Politics, Video, Finance, Business, Sports, Entertainment, Travel, sri lanka news,sri lanka latest news, latest breaking news, latest political news, covid-19 news,covid-19 news sri lanka, Sri Lanka Coronavirus updates, sl news, sl covid-19 news, SL breaking news, daily news, breaking news in sri lanka Fri, 31 Dec 2021 11:41:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.8.2 https://www.colombotamil.lk/wp-content/uploads/2021/08/cropped-logo-1-32×32.webp ColomboTamil https://www.colombotamil.lk 32 32 புத்தாண்டையொட்டி கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் https://www.colombotamil.lk/security-arrangements-intensified-in-colombo-for-the-new-year/ https://www.colombotamil.lk/security-arrangements-intensified-in-colombo-for-the-new-year/#respond Fri, 31 Dec 2021 10:30:09 +0000 https://www.new.colombotamil.lk/?p=123182 <![CDATA[புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை (1) இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு கடமையில், சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்தக் கடமைகளுக்காக கொழும்பில் அதிகளவான புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் […]]]> <![CDATA[

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இன்று (31) மற்றும் நாளை (1) இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த பாதுகாப்பு கடமையில், சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தக் கடமைகளுக்காக கொழும்பில் அதிகளவான புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கைது செய்தல், பொது இடங்களில் திரியும் திருடர்களை கைது செய்தல், மக்களை துன்புறுத்துபவர்கள், சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களை இனங்கண்டல், போக்குவரத்து நெரிசலை குறைத்தல் ஆகியன இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் உள்ளடங்கும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், மக்கள் அதிகம் கூடும் காலி முகத்திடலில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வாகனங்களை நிறுத்த விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

]]> https://www.colombotamil.lk/security-arrangements-intensified-in-colombo-for-the-new-year/feed/ 0 ஒரே ‘கிளிக்’கில் நத்தார்! ‘டயலொக்’ கின் ‘டிஜிட்டல் நத்தார் வலயம்’ அறிமுகம் https://www.colombotamil.lk/christmas-in-one-click-introduction-to-dialogs-digital-christmas-zone/ https://www.colombotamil.lk/christmas-in-one-click-introduction-to-dialogs-digital-christmas-zone/#respond Fri, 24 Dec 2021 09:39:54 +0000 https://www.new.colombotamil.lk/?p=123193 <![CDATA[பண்டிகையை கொண்டாடுவது போலவே பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய காலபருவம் இது!  கொவிட் -19 இன் மத்தியில் மற்றொரு நத்தார் தினத்தை கொண்டாடுவதற்கு உலகம் தயாராகி வருகின்ற வேளையில், டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி யின் அர்ப்பணிப்புமிக்க குழுவினர் ‘இந்த டயலொக் நத்தார் வலயத்தை ‘ அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் நத்தார் பண்டிகை நாதம் எங்கிலும் உற்சாகமாக  ஒலிக்கின்றது. அதற்கமைய, குளிர்கால ‘வொண்டர்லேண்டை’ மனக்கண்முன் கொண்டுவரும் வகையில் களிப்பூட்டல்மிக்க 3 D ஊடாடும் ‘மெய்நிகர் வொண்டர்லேண்ட்’ (டயலொக் டிஜிட்டல் நத்தார் […]]]> <![CDATA[

பண்டிகையை கொண்டாடுவது போலவே பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய காலபருவம் இது!  கொவிட் -19 இன் மத்தியில் மற்றொரு நத்தார் தினத்தை கொண்டாடுவதற்கு உலகம் தயாராகி வருகின்ற வேளையில், டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி யின் அர்ப்பணிப்புமிக்க குழுவினர் ‘இந்த டயலொக் நத்தார் வலயத்தை ‘ அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் நத்தார் பண்டிகை நாதம் எங்கிலும் உற்சாகமாக  ஒலிக்கின்றது.

அதற்கமைய, குளிர்கால ‘வொண்டர்லேண்டை’ மனக்கண்முன் கொண்டுவரும் வகையில் களிப்பூட்டல்மிக்க 3 D ஊடாடும் ‘மெய்நிகர் வொண்டர்லேண்ட்’ (டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயம்) கடந்த டிசம்பர் 20 ஆம் திகதியன்று டயலொக் கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இசைத்தம்பதியரான ரூகான்த்த குணதிலக்க மற்றும் சந்திரலேகா பெரேரா உட்பட நுகேகொடை  புனித.ஜோசப் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை லக்வின் சில்வா மற்றும் டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி யின் பிரதம  தொழிநுட்ப குழும அதிகாரி பிரதீப் டி. அல்மேதா ஆகியோரால் மேற்படி 3 D  மெய்நிகர் ‘டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயம்’ ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த இனிய ‘வொண்டர்லேண்ட்’ அனுபவத்தை பார்வையிடுவதற்கு டிசம்பர் 31, 2021 வரை இதற்குரித்தான இணைய வெளியை Christmas.dialog.lk வழியாக அணுகலாம்.

காலமாற்றங்களின் மத்தியிலும் நத்தார் தினமானது மகிழ்ச்சியையும் உன்னதத்தன்மையும் ஏற்படுத்தவல்லது. அத்தகைய உன்னதத் தன்மையை உயர்த்தும் ஒரே நோக்கத்துடன், இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனர்களாகிய டயலொக், நாடு பூராவுமுள்ள இலங்கையர்கள் தத்தமது வீடுகளில் இருந்தவாறே பாதுகாப்புடன் இணைய தளம் வழியாக நத்தார் தினத்தை கொண்டாடுவதற்கு ஈடுபாட்டுடன் கூடிய புதியதோர் அனுபவத்தை இதனூடே வழங்கியுள்ளது.

ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பிரவேசிக்கக்கூடிய இந்த ‘டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயம் ‘ முழு குடும்பமும் பங்கேற்கக்கூடிய வகையிலான பலவிதமான நிகழ்வுகளை கொண்டுவருகின்றது.  நத்தார் தாத்தாவிற்கு கடிதம் எழுதுதல் (பார்வையாளர்கள் தமது நத்தார் வாழ்த்துப் பட்டியலை நத்தார்  தாத்தாவிற்கு அனுப்பலாம், அத்துடன் தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்கள் கவர்ச்சிகரமான பரிசுகளை வெற்றி கொள்ளும் வாய்ப்பும் உள்ளது) மற்றும் ரூகான்த்த குணதிலக்க மற்றும் அவரது குடும்பத்தினரின் நத்தார் பாடல்களை கேட்கும் வாய்ப்பு,  நத்தார் ‘கரோக்கி’ பாடல் பாடும் வாய்ப்பு  (பார்வையாளர்கள் தமது சொந்த படைப்பிலான நத்தார் பாடல்களை பாடவும் பதிவு செய்யவும் முடியும்), அத்துடன் ‘நத்தலே அசிரிய ‘ தொடரைப் பார்க்கும் வாய்ப்பு (நத்தாரின்  தோற்றம் மற்றும் நத்தாருடன் தொடர்புடைய சமய சம்பிரதாய பழக்க வழக்கங்களைக் காட்டும் 10 சிறுகதைகள்), நத்தார் ‘மினி-கேம்ஸ்’களை விளையாடுவதன் மூலம் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு மற்றும் டயலொக்கின் அற்புதமான பருவகால சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பு ஆகியன இதனூடே  கிட்டுகின்றன.

‘டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயம்’ ஆரம்பித்து வைக்கப்பட்டதையொட்டி நுகேகொடை  புனித ஜோசப் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை. லக்மின் சில்வா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,     “டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், அத்துடன் இந்த டயலொக் டிஜிட்டல் நத்தார்  வலயத்தை அறிமுகப்படுத்துவதில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இந்த முயற்சிகளுக்கு உயிரூட்டும் பொருட்டு டயலொக் தனது ஆதரவை வழங்கியுள்ளமைக்காக எனது நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன்.

சீர்குலைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் உங்கள் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள புதிய அனுபவங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். நவீனத்துவம்மிக்க புதுமைகள் மிகுந்த  இந்த இணையத் தளத்தின் மூலம் விழாக்களில் கலந்து கொள்ளவும், விழாக்கால பருவங்களைப் பற்றி தெரிந்து கொள்ளச் செய்யவும், நத்தார் விழா தொடர்பாக தெளிவுபடுத்தல்களை வழங்கவும், அன்பிற்குரியோருடன் இந்த விழாவை கொண்டாடவும் மக்களை ஊக்குவிக்க நான் ஆர்வமாக உள்ளேன் ” என்றார்.

“பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வகையான நிகழ்வுகளை கொண்டிருப்பதால், டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயத்தின் வடிவத்தில் ஓர் அற்புதமான, புதுமையான படைப்பை டயலொக் வழங்கியுள்ளது” என்று மூத்த பாடகர் ரூகான்த்த குணதிலக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த செயற்பாடானது நாட்டிற்கு தனித்துவம்மிக்கதாகும், மேலும் இன்றைய நிச்சயமற்ற  சூழ்நிலையிலும்  மக்களின் மனோநிலையில் முன்னேற்றத்தையும் , ஆறுதலையும் வழங்கக்கூடிய இந்த முயற்சியை முன்னெடுத்து அனைத்து இலங்கையர்களுக்கும் உயிர்ப்பூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள டயலொக் நிறுவனத்திற்கு எனது நன்றியை  தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

மேற்படி ‘டிஜிட்டல் நத்தார்  வலயத்தை’ பார்வையிட Christmas.dialog.lk என்ற இணைய தளத்திற்கு இலவசமாக பிரவேசிக்க முடியும். இந்த இணையவாயில் 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரை மக்களுக்காக திறந்திருக்கும்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

]]> https://www.colombotamil.lk/christmas-in-one-click-introduction-to-dialogs-digital-christmas-zone/feed/ 0 இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் https://www.colombotamil.lk/chance-of-thunderstorms/ https://www.colombotamil.lk/chance-of-thunderstorms/#respond Fri, 17 Dec 2021 03:40:37 +0000 https://www.colombotamil.lk/?p=120848 <![CDATA[வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் […]]]> <![CDATA[

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

அத்துடன், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத் தென்கிழக்காக நிலை கொண்டுள்ளது.

இதனால், அடுத்த 48 மணித்தியாலங்களில் அருகில் உள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி, கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

]]> https://www.colombotamil.lk/chance-of-thunderstorms/feed/ 0 பதில் நிதியமைச்சராக ஜீ.எல் பீரிஸ் நியமனம் https://www.colombotamil.lk/prof-g-l-pieris-appointed-as-acting-finance-minister/ https://www.colombotamil.lk/prof-g-l-pieris-appointed-as-acting-finance-minister/#respond Thu, 16 Dec 2021 09:13:10 +0000 https://www.colombotamil.lk/?p=120845 <![CDATA[பதில் நிதியமைச்சராக ஜீ.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்கா சென்றுள்ளமையால் பதில் நிதியமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. “கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Get the latest Tamil news here. You can also read all the news […]]]> <![CDATA[

பதில் நிதியமைச்சராக ஜீ.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்கா சென்றுள்ளமையால் பதில் நிதியமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

]]> https://www.colombotamil.lk/prof-g-l-pieris-appointed-as-acting-finance-minister/feed/ 0 அமிதாப் வீட்டுக்கு வாடகைக்கு சென்ற ஹீரோயின்: வாடகை எவ்வளவு தெரியுமா? https://www.colombotamil.lk/amitabh-bachchan-rents-out-andheri-duplex-to-kriti-sanon-for-whopping/ https://www.colombotamil.lk/amitabh-bachchan-rents-out-andheri-duplex-to-kriti-sanon-for-whopping/#respond Mon, 13 Dec 2021 11:18:22 +0000 https://www.colombotamil.lk/?p=120839 <![CDATA[இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். மும்பையின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு சொந்த பங்களாக்கள் உள்ளன. அந்தேரியின் மேற்கு பகுதியில் லோகண்ட் வாலா சாலையில் உள்ள அட்லாண்டிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28 வது மாடியிலும் டூப்ளக்ஸ் வீடு அவருக்கு இருக்கிறது. இந்த வீட்டை, பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனானுக்கு, நடிகர் அமிதாப் பச்சன் வாடகைக்கு கொடுத்துள்ளார்.   நடிகை கீர்த்தி சனான், இந்தியில் தில்வாலே, க்ளாங்க், பரேலி கி பார்ஃபி, ஹவுஸ்புல் […]]]> <![CDATA[

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். மும்பையின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு சொந்த பங்களாக்கள் உள்ளன.

அந்தேரியின் மேற்கு பகுதியில் லோகண்ட் வாலா சாலையில் உள்ள அட்லாண்டிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28 வது மாடியிலும் டூப்ளக்ஸ் வீடு அவருக்கு இருக்கிறது.

இந்த வீட்டை, பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனானுக்கு, நடிகர் அமிதாப் பச்சன் வாடகைக்கு கொடுத்துள்ளார்.

நடிகை கீர்த்தி சனான், இந்தியில் தில்வாலே, க்ளாங்க், பரேலி கி பார்ஃபி, ஹவுஸ்புல் 4 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நேனொக்கடே என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

அமிதாப் பச்சன் வீட்டில் வாடகைக்கு இருக்க, அவர் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். அட்வான்ஸ் தொகையாக ரூ.60 லட்சமும் மாத வாடகையாக ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

நடிகர் அமிதாப்பச்சன் ஜூஹுவில் உள்ள தனது ஒரு இடத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். 15 வருடத்துக்கு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

]]> https://www.colombotamil.lk/amitabh-bachchan-rents-out-andheri-duplex-to-kriti-sanon-for-whopping/feed/ 0 மிஸ் யுனிவர்ஸ் 2021: யார் இந்த ஹர்னாஸ் சாந்து? https://www.colombotamil.lk/who-is-miss-universe-2021-harnaaz-sandhu/ https://www.colombotamil.lk/who-is-miss-universe-2021-harnaaz-sandhu/#respond Mon, 13 Dec 2021 11:13:35 +0000 https://www.colombotamil.lk/?p=120835 <![CDATA[‘மிஸ் யுனிவர்ஸ் 2021′ படத்தை வென்றுள்ள பஞ்சாப்பின் ஹர்னாஸ் சாந்து 2 படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான போட்டி, இஸ்ரேலில் உள்ள எய்லாட் நகரில் நடந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் பங்கேற்றனர். இதில் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு, முன்னாள் மிஸ் யுனிவர்ஸான மெக்சிகோவை சேர்ந்த முன்னாள் பிரபஞ்ச அழகி, ஆண்ட்ரியா மெசாவால், மகுடம் சூட்டினார். இந்தியா […]]]> <![CDATA[

‘மிஸ் யுனிவர்ஸ் 2021′ படத்தை வென்றுள்ள பஞ்சாப்பின் ஹர்னாஸ் சாந்து 2 படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான போட்டி, இஸ்ரேலில் உள்ள எய்லாட் நகரில் நடந்தது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் பங்கேற்றனர். இதில் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு, முன்னாள் மிஸ் யுனிவர்ஸான மெக்சிகோவை சேர்ந்த முன்னாள் பிரபஞ்ச அழகி, ஆண்ட்ரியா மெசாவால், மகுடம் சூட்டினார்.

இந்தியா சார்பில், சுஷ்மிதா சென் 1994 ஆம் ஆண்டும், லாரா தத்தா 2000-ம் ஆண்டும் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது, இந்தியப் பெண் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்சாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்து சண்டிகரை சேர்ந்தவர். பிரபல மாடலான இவர், கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டவர். பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களை வென்றிருக்கிறார்.

மிஸ் திவா பட்டத்தை 2021 ஆம் ஆண்டும் மிஸ் இந்தியா பஞ்சாப் பட்டத்தை 2019 ஆம் ஆண்டும் பெற்ற ஹர்னாஸ், யாரா தியான் பூ பரன் (Yaara Diyan Poo Baran) மற்றும் பாய் ஜி குட்டாங்கே ( Bai Ji Kuttange) ஆகிய பஞ்சாபி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பொது நிர்வாகவியல் துறையில் முதுகலை படித்துவரும் ஹர்னாஸுக்கு இன்ஸ்டாவில் ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

]]> https://www.colombotamil.lk/who-is-miss-universe-2021-harnaaz-sandhu/feed/ 0 “நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு” https://www.colombotamil.lk/the-president-has-the-power-to-adjourn-parliament/ https://www.colombotamil.lk/the-president-has-the-power-to-adjourn-parliament/#respond Mon, 13 Dec 2021 11:11:08 +0000 https://www.colombotamil.lk/?p=120832 <![CDATA[பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்ற அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை கூறியுள்ளார். மேலும் இந்த தீர்மானம் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்றும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். “கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil Follow […]]]> <![CDATA[பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்ற அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை கூறியுள்ளார்.

மேலும் இந்த தீர்மானம் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்றும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

]]> https://www.colombotamil.lk/the-president-has-the-power-to-adjourn-parliament/feed/ 0 காணாமல் போன இரண்டு சிறுவர்கள்; பொலிஸாரின் அறிவிப்பு https://www.colombotamil.lk/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5/ https://www.colombotamil.lk/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5/#respond Mon, 13 Dec 2021 10:24:24 +0000 https://www.colombotamil.lk/?p=120829 <![CDATA[காணாமற்போயுள்ள கொட்டதெனியாவ – பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்களையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர். 10 மற்றும் 12 வயதான இரு சிறுவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர் : திசாநாயக்க முதியன்சேலாகே சந்தகெலும் வயது : 10 பெயர் : ஜயசேகர முதலிகே அகில தேதுணு வயது : 12 குறித்த சிறுவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். கொட்டதெனியாவ […]]]> <![CDATA[

காணாமற்போயுள்ள கொட்டதெனியாவ – பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்களையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர்.

10 மற்றும் 12 வயதான இரு சிறுவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் : திசாநாயக்க முதியன்சேலாகே சந்தகெலும்
வயது : 10

பெயர் : ஜயசேகர முதலிகே அகில தேதுணு
வயது : 12

குறித்த சிறுவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொட்டதெனியாவ பொலிஸ் நிலையம் – 071 8591634, 033 2240050, 033 2272222

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

]]> https://www.colombotamil.lk/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5/feed/ 0 One Galle Face Mall இல் யூனியன் அஷ்யூரன்ஸின் பண்டிகைக் கால கொண்டாட்டம் https://www.colombotamil.lk/union-assurance-festive-celebration-at-one-galle-face-mall/ https://www.colombotamil.lk/union-assurance-festive-celebration-at-one-galle-face-mall/#respond Mon, 13 Dec 2021 10:18:50 +0000 https://www.colombotamil.lk/?p=120824 <![CDATA[இந்தப் பண்டிகைக் காலத்தில், உங்கள் நம்பிக்கையை வென்ற காப்புறுதிப் பங்காளரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, டிசம்பர் 10ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள், One Galle Face (OGF) இன் கீழ் மாடியில் அமைந்துள்ள விற்பனைகூடத்துக்கு விஜயம் செய்வோருக்கு இலவச சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுகாதார பரிசோதனைகளில் இருதய வயது கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, அதனூடாக இருதயக் கோளாறு அல்லது பக்க வாதம் ஏற்படுவதற்கான இடர் தொடர்பில் புரிந்து கொள்ளக்கூடியதாக […]]]> <![CDATA[

இந்தப் பண்டிகைக் காலத்தில், உங்கள் நம்பிக்கையை வென்ற காப்புறுதிப் பங்காளரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, டிசம்பர் 10ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள், One Galle Face (OGF) இன் கீழ் மாடியில் அமைந்துள்ள விற்பனைகூடத்துக்கு விஜயம் செய்வோருக்கு இலவச சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சுகாதார பரிசோதனைகளில் இருதய வயது கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, அதனூடாக இருதயக் கோளாறு அல்லது பக்க வாதம் ஏற்படுவதற்கான இடர் தொடர்பில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலும், டிசம்பர் 22ஆம் திகதி யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமத் தூதுவர்களான பாதியா மற்றும் சந்துஷ் ஆகியோருடன் இணையலாம்.  இந்த கூடத்துக்கு விஜயம் செய்வோருக்கு, இந்த இசை நட்சத்திரங்களை சந்தித்து நிழல்படம் எடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

வாடிக்கையாளர்களின் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை இனங்கண்டு யூனியன் அஷ்யூரன்ஸின் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி காப்புறுதி ஆலோசகர்களால் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், HEALTH 360 தீர்வுடன், நுகர்வோருக்கு தமது அன்புக்குரியவர்களுக்காக சிறந்த சிகிச்சையை பெற்றுக் கொள்ளக் கூடிய சுதந்திரம் வழங்கப்படுகின்றது.  HEALTH 360 இனால் நுகர்வோருக்கு ஒரே தீர்வின் கீழ் முழுக் குடும்பத்துக்குமான சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய பரிபூரண காப்பீடு வைத்தியசாலை கட்டணங்கள், சத்திர சிகிச்சை, மருத்துவம், குழந்தைப் பேறு சேவைகள், பல் மற்றும் மூக்குக் கண்ணாடிசார் சேவைகள் போன்றவற்றுக்கு வழங்கப்படுகின்றன.

சுகாதார இணைந்த காப்பீட்டுக்காக அதியுயர் வயதெல்லையான 75 வருடங்கள் வரை வருடாந்தம் 60 மில்லியன் ரூபாய் வரையான காப்பீட்டுத் தொகையை வழங்குகின்றது. மேலதிக தகவல், மற்றும் HEALTH 360 காப்புறுதி பற்றிய விடயங்களை OGF இல் அமைந்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் விற்பனை கூடத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் அவை மாற்றியமைக்கப்படுவதை கம்பனியின் காப்புறுதி ஆலோசகர்கள் உறுதி செய்வார்கள்.

உறுதியான பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், முதலீடு மற்றும் ஓய்வூதிய காப்புறுதிப் பிரிவுகளினூடாக தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை எய்துவதற்கான அர்ப்பணிப்பை யூனியன் அஷ்யூரன்ஸ் எப்போதும் உறுதி செய்துள்ளது.

புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருக்கும் வகையில், இந்த காட்சிகூடத்தில் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான உள்ளம்சங்கள் இணைக்கப்பட்டு, விஜயம் செய்வோருக்கு சகல சுகாதார அறிக்கைகள் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக பெற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுகள் பற்றிய விளக்கங்கள் போன்றன வழங்கப்படுகின்றன. எமது சகல காப்புறுதி ஆலோசகர்களும் சிறந்த தீர்வு மற்றும் சேவை அனுபவத்தை வழங்க தயாராகவுள்ளனர்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.6 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 45.3 பில்லியனையும், 2021 ஜுன் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 300% ஐக் கொண்டிருந்தது.

இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்க்கு வழங்குகின்றது.

நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

]]> https://www.colombotamil.lk/union-assurance-festive-celebration-at-one-galle-face-mall/feed/ 0 வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம் https://www.colombotamil.lk/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a8/ https://www.colombotamil.lk/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a8/#respond Thu, 09 Dec 2021 11:13:59 +0000 https://www.colombotamil.lk/?p=120819 <![CDATA[வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அட்மிரல் ஒஃப் த ஃபீல்ட் மார்ஷல் வசந்த கரன்னாகொட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (09) பதவிப்பிரமாணம் செய்தார். முன்னாள் கடற்படைத் தளபதியாக விளங்கிய வசந்த கரன்னாகொட, தாய்நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவராவார். அத்துடன், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராகவும் அவர் சேவையாற்றியுள்ளார். வடமேல் மாகாண ஆளுநராகவிருந்த ராஜா கொல்லுரே மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே, வடமேல் மாகாணப் புதிய ஆளுநர் பதவிக்கு வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார் […]]]> <![CDATA[

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அட்மிரல் ஒஃப் த ஃபீல்ட் மார்ஷல் வசந்த கரன்னாகொட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (09) பதவிப்பிரமாணம் செய்தார்.

முன்னாள் கடற்படைத் தளபதியாக விளங்கிய வசந்த கரன்னாகொட, தாய்நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவராவார். அத்துடன், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராகவிருந்த ராஜா கொல்லுரே மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே, வடமேல் மாகாணப் புதிய ஆளுநர் பதவிக்கு வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

]]> https://www.colombotamil.lk/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a8/feed/ 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *