திருகோணமலையில் 14 எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்க நடவடிக்கை

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையத்தில் இலங்கை ஐ.ஒ.சி நிறுவனம் பயன்படுத்தும் 14 எண்ணெய் குதங்களை மேலும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கே குத்தகைக்கு வழங்கவும் இந்தியாவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், 24 எண்ணெய் குதங்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கவும், 61 எண்ணெய் குதங்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 51 வீத பங்குகளும், இலங்கை ஐ.ஒ.சி நிறுவனத்திற்கு 49 வீத பங்குகள் என்ற அடிப்படையில் இணைந்து நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *