திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, டைனமைற் குச்சிகள் 07 ,டெட்டனேட்டர் குச்சிகள் 03, 08 அடி நீளமுள்ள வயர் போன்றவற்றுடன் 38 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலில் குறித்த பகுதியில் உள்ள வீதியில் வைத்து அவரை சோதனைக்கு உட்படுத்தியபோதே வெடிபொருட்களுடன் சந்தேக நபர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.