ஒரு மாதத்திற்கான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தரம் 5 ஆம் ஆண்டுக்கு மேல் 50 சதவீத மாணவ கொள்ளளவுடன் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்டில், முடக்க கட்டுப்பாடுகளை அமுலாக்காமல், இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்துப் பிரஜைகளும் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *