கல்முனை…

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட 12 ஆம் வட்டாரம் கல்முனை 01E பிரிவில் மாநகர சபையின் திண்ம கழிவகற்றல் வாகனங்கள் சீராக வருவதில்லை மாதங்களை கடந்தும் திண்மக்கழிவகற்றல் இடம்பெறுகின்றது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனை 01 E பிரிவில் பல வீதிகளில் உள்ள வீடுகளில் குப்பைகள் பைகளில் கட்டப்பட்டவாறு குவிந்து உள்ளன.. கல்முனை 01 E கடற்கரை வீதிக்கு திண்மக்கழிவகற்றல் வாகனம் வந்து ஒரு மாதங்களாகின்றது

இனியும் தாமதியது திண்ம கழிவகற்றல் வாகனங்களை அனுப்ப உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *