ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு 10 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க வேண்டும் – மோடி அரசிடம் சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு உடனடியாக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்குவதற்கு இந்தியா முன்வரவேண்டும் என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

வெளிவிவகாரக் கொள்கைகளில் தோல்வி அடைந்திருக்கும் மோடி அரசாங்கம், இலங்கை விவகாரத்திலும் தோல்வியடையக்கூடாது என குறிப்பிட்டார்.

ஆகவே இந்த கடன் உதவியை இந்திய அரசாங்கம் வழங்கவிட்டால் சீனாவிற்கு மற்றுமொரு கனிஷ்ட பங்காளி கிடைப்பதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சுப்ரமணியன் சுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஓர் நீண்டகாலப்பங்காளி அவசியம் என்றால் இப்போதே 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை ராஜபக்ஷ அரசாங்கத்திற்குக் கடனான வழங்குவதற்கென இந்தியா ஒதுக்கீடு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *