தீவக பகுதிகளில் கூட்டுறவுத் துறையை முன்னேற்ற வடக்கு மாகாண ஆளுநர் திட்டம்

தீவகப் பகுதிகளில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை முன்னேற்றுவதற்காக வடமாகாண ஆளுநர்ஜீவன் தியாகராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

தீவகத்தில் செய்யப்பட்ட பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் கட்டட நிர்மாண பொருட்களை விற்பனை செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலணை ஊர்காவற்துறை காரைநகர் புங்குடு தீவு ஆகிய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் குறித்த பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி வேலணை காரைநகர் 6ஆம் திகதி ஊர்காவற்துறை அதனைத் தொடர்ந்து புங்குடுதீவு நயினாதீவிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

ஆகவே கூட்டுறவுத்துறை மூலம் தீவிரத்தை அநிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாக ஜீவன் தியாகராஜா மேலும் தெரிவித்தார்.

Leave a Reply