நாட்டில் மீண்டும் அச்சுறுத்தலாக மாறி வரும் கோவிட் மரணங்கள்!

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,111 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

இதேவேளை, நாட்டில் பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 329,268 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,கோவிட் தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 293,357 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *