இந்திய மீனவர்களுக்கு எதிராக கொட்டும் மழையில் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக, யாழ்ப்பாணம் = மயிலிட்டிப் பகுதியில் நேற்றுப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வலிகாமம் வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் முற்பகல் 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைதுசெய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு,…” என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டும் மழையிலும் கடற்றொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *