சத்மல எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமற்போன தந்தை, மகன் சடலமாக மீட்பு!

தெனியாய – சத்மல எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (48) மற்றும் மகன் (16) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

குறித்த இருவரையும் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

யாழில் பரவும் இருவேறு நோய்கள்: மூவர் அடையாளம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *