மீண்டும் அதிகரித்தது அரிசியின் விலை!

சந்தையில் அரிசி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.10இல் இருந்து ரூ.30 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பிட்ட வகை அரிசி வரத்து குறைவாக இருப்பதே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அரிசியின் விலை தொடர்பில் முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்கள் மீண்டும் கலந்துரையாடி அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரிசி விலைக் கட்டுப்பாட்டில் இருந்து அரசாங்கம் அண்மையில் விலகியதைத் தொடர்ந்து அரிசி வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து வருகின்றனர்.

இதேவேளை, இன்றையதினம் சிமெந்தின் விலை ரூபா 100 ஆல் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

‘Jaffna kings’ வெற்றிக்கேடயம்: பலருக்கு வாய்ப்பு வழங்கப்படும்! வாகீசன் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *