முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: சிறுமி ஒருவர் படுகாயம்!

அக்கறைபற்று, கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் வெட்டு வாய்க்கால் காரைதீவு எல்லையில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதிலேயே சிறுமி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது ,கல்முனை நேக்கி வந்த முச்சக்கரை வண்டி மற்றும் அக்கறைப்பற்றை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் பயணித்த சிறுமியே படுகாயமடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *