ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவு

மட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்துடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை கொடியேற்றம் செய்யாமல், அபிசேக ஆராதனைகளுடன் ஆலய நிர்வாகம் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களின் பங்கேற்புடன் வருடாந்த மஹோற்சவம், கடந்த 30.07.2021 ஆம் திகதி  ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட யாக பூஜை, மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

அதன்பின்னர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள மாமாங்கேஸ்வரருக்கு, விசேட பூஜைகள் மற்றும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ஆகியன ஆலய வளாகத்திலுள்ள மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் குளத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *