இலங்கையில் காணப்படும் சில வைத்தியசாலைகளில் பிணவறைகள் நிரம்பி வழிவதாக தொடந்தும் சர்ச்சையாக உள்ளது.
தற்போது, களுபோவில வைத்தியசாலையின் உள்ள பிணவறையின் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்ட 37 சடலங்களில் 20 சடலங்கள் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயத்தை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் வைத்தியசாலையை அடைய முடியாமலும், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் சடலங்களை கோருவதற்கான முழுமையான ஆவணங்கள் இல்லாமை போன்ற காரணமாகவும் சடலங்கள் அகற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அச்ச நிலைக்கு மத்தியில் நோயாளிகளால் வைத்தியசாலை நெரிசல் அடைவது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
எனினும், இப்போது நோயாளர்களின் நிலை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.