நான் வேலையில்லா பட்டதாரி கிடையாது என்பதனால் அரசாங்கத்திடம் பதவி ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்க போவதில்லை என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளதாக தென் இலங்கை பத்திரிகை ஒன்று அறிவித்துள்ளது.
தாம் செயலாளர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் அரசாங்கத்தின் ஆலோசகர் பதவிக்கோ அல்லது வேறும் அரச பொறுப்புக்களையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் தனது தொழில் அனுபவங்களை ஒன்று திரட்டி நூல் ஒன்றை எழுத உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் அரசாங்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்த தாம் எதிர்வரும் நாட்களில் ஓய்வாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்திற்கு தமது வாழ்த்துக்களை கூறியதாகவும், அவர் சிறந்த ஓர் அதிகாரி எனவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதனை செய்யத் தயார் என பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.






