கிராமப்புறங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்கு போக்குவரத்து வசதிகள்!

கிராமப்புறங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

இந்த நிலையில், பேருந்து ஓட்டுநர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, ரயில் சேவைகளும் எவ்வித இடையூறும் இன்றி இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *