விடுபட்ட பாடங்களை பூர்த்தி செய்ய திட்டம்! கல்வி அமைச்சு

மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இது முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டின் முதலாம் தவணை நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 27 பேர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *