கடந்த 2015 ஆம் ஆண்டு மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து எரித்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் – கோண்டாவிலைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு வவுனியாவிற்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் வவுனியா – முருகனூர் பகுதியில் மனைவியையும் குழந்தையையும் கொலை செய்து எரித்துள்ளர்.
இந்நிலையில் தாயையும், பிள்ளையையும் காணவில்லை என கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி குறித்த பெண்ணின் தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முன்வைத்திருந்த முறைப்பாட்டிற்கு அமைய வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த விசாரணைகளில் சந்தேகநபர் நேற்று (08) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வவுனியா பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.