பிரதமர் பதவியை பசிலுக்கு வழங்குவதாக வெளியான தகவல் குறித்து மஹிந்த விளக்கம்

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக நாட்டில் தகவலொன்று பரவி வருகிறது.

இந்நிலையிலேயே, ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள பிரதமர், நாட்டில் காணப்படும் ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் பல வதந்திகளை பரப்பிவருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் புத்திஜீவிகள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக சுதந்திரத்தை தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துவது நியாயமில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *