மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலைமீன்மடு 50 வீட்டுத் திட்டத்தில், இரு குழுக்களுக்கிடையில் மது போதையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன், வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இருகுழுவினரும் நேற்று ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ள நிலையில், ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது.
இதனையடுத்து, 119 பொலிஸ் அவசர சேவை இலக்கத்துக்குக் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றதையடுத்து இரு குழுவினரும் சமாதானமாகினர்.
இதில் காயமடைந்த ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், இருகுழுக்களையும் பொலிஸார் சண்டை போடக்கூடாது என எச்சரித்துச் சென்றனர்.
இந்த குழு ஒன்றுடன் தொடர்புபட்ட, நாகநாதன் நவநீதனின் குடும்பத்தினர் பயத்தில் அருகிலுள்ள வீட்டில் நேற்று இரவு சென்று தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது அவரின் வீட்டை இன்று அதிகாலையில் இனம் தெரியாத ஒருவர் தீயிட்டுள்ளதையடுத்து, வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டவருடன் திருமணம்: சுற்றறிக்கையை திருத்தி கால அவகாசம் வழங்குமாறு பதிவாளர்கள் வலியுறுத்து!






