இளவாலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த 47 வயதுடைய அந்தோனிப்பிள்ளை ரமணன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

அவரது குடும்பத்தினர் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் நகர பிதா பொதுமக்களிடம் விடுக்கும் வேண்டுகோள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *