மூன்று மாவட்டங்களில் ஒமிக்ரான் தொற்றாளர்கள் கண்டறிவு!

இலங்கையில் கொழும்பு, கம்பஹா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து இருந்தே ஒமிக்ரான் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டின் மூன்று மாவட்டங்களில் ஒமிக்ரான்; தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் இதுவரை ஒமிக்ரான்; தொற்றுக்குள்ளான 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒமிக்ரான் தொற்றினால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் அறிந்து, சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் செயற்பட வேண்டும்.

இத்தொற்றால் முழு நாட்டையும் அபாயத்திற்கு உட்படுத்தும் வகையில் செயற்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.

இளவாலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *