கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகுவது பழிவாங்கும் செயற்பாடு – அமைச்சர்

ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகுவது என்பது பழிவாங்கும் செயற்பாடாகவே கருதப்படும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்கமும் நாடும் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ளும் நேரத்தில் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

தற்போது நிலவும் கொரோனா நிலைமை காரணமாக, திட்டமிட்டபடி பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியாது என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

எனவே அவர்கள் பாடத்திட்டத்தை உள்ளடக்க ஒன்லைன் கல்வி முறையை சார்ந்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் கூறினார்.

இருப்பினும், தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, மாணவர்களுக்கான ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாதுள்ளது என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *