உலர விடப்பட்டிருந்த நெல் விசமிகளால் தீக்கிரை

உலரவிடப்பட்டிருந்த நெல் விசமிகளால் தீக்கிரையாகிய சம்பவமொன்று முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது.

சும்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாந்தை கிழக்கு – கருப்புள்ளியான் கிராமத்தை சேர்ந்த பஞ்சலிங்கம் எனும் விவசாயி தனது வயலில் அறுவடை செய்த நெல்லை வெளியே உலர விட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த நெற்கள் விசமிகளால் தீமூட்டி அழிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலர விடப்பட்டிருந்த நெல் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இதனால் குறித்த விவசாயிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *