மரக்கறிகளின் விலைகளை வியாபாரிகள் நிர்ணயிக்க முயற்சிப்பதாக நுகர்வோர் குற்றச்சாட்டு

கம்பஹா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் மிக அதிகமாக உள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஒரு கிலோ பச்சை மிளகாய் இன்று 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காய்கறிகளின் தட்டுப்பாட்டால் விலை அதிகரித்தாலும், தமக்கு ஏற்றவாறு தன்னிச்சையாக மரக்கறிகளுக்கான விலைகயை வியாபாரிகள் நிர்ணயிக்க முயற்சிப்பதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *