இலங்கையின் தனியார் பேரூந்துகளில் கட்டணங்களை செலுத்துவதற்காக முன்கூட்டிய பணம் செலுத்திய அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2022 ஜனவரி மாதம் நடுப்பகுதியில் இருந்து முன்கூட்டிய பணம் செலுத்திய அட்டைகள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது
இந்தநிலையில் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் அட்டைகளை அறிமுகப்படுத்தப்படுவதால், பேருந்துகளின் நடத்துநர்கள் தமது தொழில்களை இழக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், தற்போதைய பொருளாதார சிக்கல் நிலையில் பயணிகளுக்கு அது நன்மையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.