தொழில் வாய்ப்புக்காக ஓமானுக்குச் சென்றிருந்த நிலையில், சிரமங்களுக்கு உள்ளாகிய நிலையிலும் இலங்கைக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த இலங்கைப் பணிப்பெண்கள் 16 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.
மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, பதுளை, கண்டி, குருநாகல், சிலாபம், ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் தங்கள் முதலாளிகளால் பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் ஊதியம் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் அவர்கள் இலங்கை தூதரகத்தின் ‘சுரக்ஷா’ தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்து பணிப்பெண்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.