புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு யாழில் கௌரவிப்பு!

2020 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ் கொடிகாமத்தில் இடம்பெற்றுள்ளது.

2020 ஆம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை வங்கியின் கொடிகாமம் கிளையில் வங்கி கணக்கினை பேணும் 47 மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வு இலங்கை வங்கி கொடிகாமம் கிளையின் முகாமையாளர் றொட்டேறியன் தர்மலிங்கம் கபிலன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், சாவகச்சேரி நகர சபைத் தலைவர் ஆர்.வாமதேவன், இலங்கை வங்கியின் சாவகச்சேரி பிராந்திய முகாமையாளர் சுஜாதா நெதானந்தன், கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலை அதிபர் கே.மகிந்தன், மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை அதிபர் இளங்கோ மாணவர்கள், பெற்றோர்கள், வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *