இரவு நேரங்களில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (08) இரவு அநுராதபுரத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் சாரதியை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை கொல்லையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாட்டில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.