இ.போ.ச பேருந்தின் சாரதி, நடத்துனர் மீது தனியார் பேருந்தினர் தாக்குதல்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தினை வழிமறித்து நடத்துனர் மற்றும் சாரதி மீது தனியார் பேருந்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இன்று (09) காலை 6.30 மணியளவில் கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து கிளிநொச்சி பேரூந்து நிலையத்திலிருந்து இன்று (09) காலை 6.10 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்திருந்தது.

குறித்த பேருந்து பயணத்தினை ஆரம்பித்த அதே நேரத்தில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சி நகரை வந்தடைந்தது.

இதன் போது பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

கரடிபோக்கு பகுதியினை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து அண்மித்த சமயத்தில் குறித்த பேருந்தினை வழிமறித்த தனியார் பேருந்தினர் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் நடத்துனர், சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளாகிய இலங்கை போக்குவரத்து சபை சாரதி மற்றும் நடத்துனர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *